இதுநாள் வரை அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக பாசமலர் படத்தைப் பற்றியே பேசி வந்தோம். இனி அதனுடன் இந்த படத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். தவிர இந்தப் படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என்பதுதான் இதன் சிறப்பு.
Kenny Water ரும் Betty Anne Water ரும் அண்ணன்- தங்கை. சிறு வயதில் தாயாரின் (9 கணவருக்கு 7 பிள்ளைகள் பெற்றுக் கொடுத்தவள்) சரியான கவனிப்பின்றி கொஞ்சம் முரட்டுத்தனமும் குறும்புத்தனமும் மிகுந்த பிள்ளைகளாக வளர்கின்றனர். இவர்களின் அட்டூழியம் அவர்கள் குடியிருந்த Ayer (America) நகர் மக்களிடையே வெகு பிரபலம் என்பதால், அடிக்கடி காவல் நிலையம் சென்று வர வேண்டியதிருக்கிறது. அதிலும் Kenny மீது போலீசார் தனி கவனம் செலுத்தி கண்காணிக்கின்றனர். அந்த அளவுக்கு முரட்டுப் பேர்வழி.
அண்ணன் தங்கை இருவரும் வளர்ந்து திருமணமாகி மகிழச்சியான வாழ்ந்து வரும் சமயத்தில்,1983ஆம் வருடம் Kenny மீது ஒரு கொலைக் குற்றசாட்டு மீது சுமத்தப்படுகிறது. 1980ஆம் ஆண்டு Ayer நகரில் நடந்த அந்தக் கொலையை Kennyதான் செய்ததாக kennyயின் மனைவி உட்பட பலரும் சாட்சி சொல்கிறார்கள். தங்கை Betty மட்டும் தன் அண்ணன் அந்தக் கொலையைச் செய்திருக்க மாட்டான் என்று தீர்மானமாக நம்புகிறாள். சாட்சியங்களின் அடிப்படையில் Kennyக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
தவறே செய்யாத தன் அண்ணன் தண்டிக்கப்பட்டதை கண்டு பொங்கி எழும் தங்கை Betty, தன்னுடைய வாழ்நாளில் அண்ணனை சிறையிலிருந்து மீட்பதையே லட்சியமாகக் கொண்டு சட்டம் பயிலத் தொடங்குகிறாள். இடையிடையே.. சிறைக்குச் சென்று அண்ணனுக்கு ஆறுதலாகவும் இருந்து வருகிறாள். இது அவள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கிறது. இருந்தாலும் அண்ணனுக்காக எல்லாவற்றையும் அந்த அன்புத் தங்கை தாங்கிக் கொள்கிறாள்.
ஒரு வழியாக டிஎன்ஏ பரிசோதனை மற்றும் பிரபல வழக்கறிஞர் Berry Sheck துணையுடன் 18 வருடங்கள் கழித்து அவளால் தனது அண்ணனை நிரபராதி என்று நிரூபிக்க முடிகிறது. 1983ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட அண்ணனுக்கு 2001ஆம் ஆண்டு ஜுன் 19ஆம் தேதி விடுதலை வாங்கிக் கொடுக்கிறாள் தங்கை. இந்தப் படம் இதுவரை வெளிவந்த படங்களில் சிறந்த படம் என்று சொல்ல முடியாது. ஆனால் அண்ணன் தங்கை உறவுக்கு தனி மதிப்பளிக்க வந்திருக்கும் படம். அண்ணன் Kenny Waterராக Sam Rockwellலும் தங்கை Betty Anne Waterராக Hilary Swankக்கும் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநர் Tony Goldwyn.