அறிந்ததும் – புரிந்ததும்…

நான் என்பது
ஆன்மா
என்று மதம்
சொல்கிறது…

நான் என்பது
உடல் என்று
என் பெயர் சொல்கிறது…

நான் என்பது
ஒன்றுமில்லை…
என்று எனக்குத்
தெரிந்தேயிருக்கிறது…

காரணம்…

நான் விரும்பாமல்தான்
என் பிறப்பே
நிகழ்ந்திருக்கிறது…!

பின்னூட்டமொன்றை இடுக