Category Archives: புத்தகம்

A Doctor In The House:The Memoirs of Mahathir

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது எழுதிய A Doctor In The House : The Memoirs of Mahathir என்ற இந்த புத்தகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை என் மனைவி எனக்குப் பரிசளித்தாள். புத்தகம் வெளிவந்து கிட்டத்தட்ட 1 மாதம் ஆகப் போகிறது (9 மார்ச்). இப்போதுதான் என் கைக்கு கிடைத்திருக்கிறது. விலை 100 ரிங்கிட் மட்டுமே.

 தனிப்பட்ட முறையில் எனக்கு துன் மகாதீரைப் பிடிக்கும். ஒரு சில அரசியல் முடிவுகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் துன் மகாதீர் மலேசியாவின் அடையாளம். அப்படிப்பட்ட தலைவனின் சுயசரிதம் இது. பால்ய பருவம் தொடங்கி 22 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த வரை உள்ள  தனது எண்ண அலைகளை ஒளிவு மறைவில்லாமல் இந்த புத்தகத்தில் பதிவு செய்திருப்பதாக துன் மகாதீர் கூறியிருந்தார்.

 கிட்டத்தட்ட 800க்கும் அதிகமான பக்கங்களில் 62 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளது. இனி படித்துப் பார்த்துதான் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். இன்று படிக்கத் தொடங்குகிறேன். விரைவில் புத்தகத்தில் அடங்கியிருக்கும் முக்கியத் தகவல்களை பதிவிடுகிறேன். இதற்கிடையில் புத்தகத்தை வாங்க விரும்புவோர் MPH கடைகளில் நேரடியாக சென்று வாங்கலாம்.

‘கதகளி’ நூல் வெளியீட்டு விழா

kathacover

நண்பர் உதயசங்கர் எஸ்பியின் ‘கதகளி’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 12ஆம் தேதி, தேசிய நூலக அரங்கத்தில் காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் நேராக நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கே வந்து விடலாம். நுழைவு இலவசம்.

“இந்த விழாவில் நிறைய இந்தியர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். குறிப்பாக மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்று சமீபத்தில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது சொன்னார். ஓர் இந்தியர் தேசியமொழி இலக்கியத் துறையில் இவ்வளவு தூரம் சாதிப்பது சாதாரண காரியமில்லை. அதற்க்கெல்லாம் அசாத்திய மொழி ஆற்றலும் கற்பனை வளமும் வேண்டும். அப்படியொரு மனிதராக நம்மிடையே வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு சாதனையாளருக்கு மதிப்பளிக்க விரும்பினால் கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு போங்க… மனசார வாழ்த்திவிட்டு வாங்க…!.

நிகழ்ச்சி நிரல் தேவைப்படுகிறவர்கள் http://www.kavyan.blogspot.com என்ற வலைப்பதிவு முகவரியில் அதைக் காணலாம்.

‘கதகளி’ – Kathakali

kathacover

தேசிய மொழி இலக்கிய உலகில் முத்திரை பதித்த இந்திய எழுத்தாளர்களில் நண்பர் உதயசங்கர் எஸ்பி குறிப்பிடத்தக்கவர். இவர் எழுதிய தேசிய மொழி சிறுகதைகள் ‘கதகளி’  என்ற பெயரில் தொகுப்பு நூலாக இன்று முதல் (19-06-09)  விற்பனையாகும்.  இது அவரது படைப்பில் வெளிவரும் 12வது நூல். இந்த புத்தகத்தின் விலை ரி.ம 20.00 மட்டுமே.

5க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இந்த நூலை வாங்கி பள்ளிகளுக்கு அன்பளிப்பு செய்ய விரும்பும் கொடை நெஞ்சங்களுக்கு 50 விழுக்காடு கழிவு விலையில் புத்தகங்கள் வழங்க அவர் முடிவெடுத்துள்ளார்.  மேல் விபரங்களுக்கு 012-336 8142 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது uthayasb@yahoo.com.my என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அவரை தொடர்பு கொள்ளலாம்.

தேசிய மொழி இலக்கிய துறையில் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு வெற்றி நடை போட்டு வரும் உதயசங்கர் எஸ்பி, இந்திய மாணவர்கள் தேசிய மொழி ஆளுமையில் பின்தங்கி விடக்கூடாது என்ற நோக்கத்தில் காவ்யன் (KAVYAN) என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த அமைப்பின் வாயிலாக இந்திய மாணவர்கள் தேசிய மொழியில் சிறந்து விளங்குவதற்கான பல பயிற்சி பட்டறைகளையும் அவர் நடத்தி வருகிறார். நம் நாட்டின் தேசிய இலக்கியவாதி பெருமதிப்பிற்குரிய ஏ.சமாட் சைட் அவர்கள்தான் காவ்யன் அமைப்பின் ஆலோசகராக செயல்படுகிறார்.

விடியல் வார இதழில் வெளிவந்த அவருடனான நேர்காணல் விரைவில் இங்கே இடம்பெறும். அதுவரை… ப்ளீஸ் வெயிட்!