நண்பர் உதயசங்கர் எஸ்பியின் ‘கதகளி’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 12ஆம் தேதி, தேசிய நூலக அரங்கத்தில் காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் நேராக நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கே வந்து விடலாம். நுழைவு இலவசம்.
“இந்த விழாவில் நிறைய இந்தியர்கள் கலந்து சிறப்பிக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். குறிப்பாக மாணவர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்று சமீபத்தில் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது சொன்னார். ஓர் இந்தியர் தேசியமொழி இலக்கியத் துறையில் இவ்வளவு தூரம் சாதிப்பது சாதாரண காரியமில்லை. அதற்க்கெல்லாம் அசாத்திய மொழி ஆற்றலும் கற்பனை வளமும் வேண்டும். அப்படியொரு மனிதராக நம்மிடையே வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு சாதனையாளருக்கு மதிப்பளிக்க விரும்பினால் கண்டிப்பாக நிகழ்ச்சிக்கு போங்க… மனசார வாழ்த்திவிட்டு வாங்க…!.
நிகழ்ச்சி நிரல் தேவைப்படுகிறவர்கள் http://www.kavyan.blogspot.com என்ற வலைப்பதிவு முகவரியில் அதைக் காணலாம்.